புதிய வழிகாட்டி நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்
1. பாடசாலை நிர்வாக பொறுப்பு:
இப்போது, பாடசாலை தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிரிவு தலைவர்கள் இந்த கல்வி தொடர்பான சமூக ஊடகக் குழுக்களின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். அவர்கள் குழுக்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் கல்வி சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. கல்வி தொடர்பான தகவல்களுக்கு மட்டும் அனுமதி:
குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் முழுமையாக பாடத் திட்டம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காகவே இருக்க வேண்டும். மாணவர்களின் தனியுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது, மேலும் மாணவர்களின் நலனுக்கு மாறாகப் போகக்கூடிய புகைப்படங்கள், ஒலிவழி செய்திகள் போன்றவை அனுப்பப்படக் கூடாது.
3. அனைவருக்கும் சம வாய்ப்பு :
குழுக்களில் சேராத மாணவர்கள் புறக்கணிக்கப்படாமல் கல்விச் செய்திகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பு வழங்கப்படுவது அவசியம்.
4. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு எளிய பகிர்வுகள் :
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி தகவல்கள் எளிமையாகவும், அடிப்படையாகவும் பகிரப்பட வேண்டும். கல்வி அறிவிப்புகளை மட்டுமே கூறும் தகவல்களை பகிர்வது அவசியம்.
5. பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு அதிக சிரமம் இல்லாமல்:
மாணவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் மற்றும் பணிகளின் அளவு பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும். இது மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்கவும், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவவும் செய்கிறது.
6. சட்டப்படியான நடவடிக்கைகள் :
இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி சுற்றுச்சூழலின் நலனுக்கான முயற்சி
இந்நவீனக் காலத்தில் சமூக ஊடகங்கள் கல்வியில் எளிதான தொடர்புகளை வழங்குகின்றன. அதே சமயம், சில நேரங்களில் இதனால் மாணவர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அதனைத் தடுக்கவே கல்வி அமைச்சு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் நலனை காக்கும் மற்றும் பாதுகாப்பான கல்வி சூழல் உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.
By : G.Umaramanan